

யாழ். சித்தங்கேணி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து BR Oud-Vossemeer ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சச்சிதானந்தன் முத்துக்குமாரு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!
எங்கள் உள்ளங்களில் என்றும்
அன்புடன் நிலைத்திருக்கும் சச்சி மச்சி,
நீங்கள் எங்களை விட்டுச்சென்று ஆண்டுகள்
இரண்டானுலும் இன்னும் இது மாயையோ
என்று புலம்பி நிட்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
Satchi, I always remember those beautiful happier days we had when you were here, in France and uin Holland. Never thought you would disappear just a lightning. Never replaceable, fun loving...