10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரஸ்வதி வேலாயுதபிள்ளை
ஓய்வுபெற்ற கர்நாடக சங்கீத பரிசோதகர்- இலங்கை
வயது 95
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Lincolnshire ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி வேலாயுதபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
இறைவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்