யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி வீரகத்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மாவிற்கு நிகர் அன்னை !
அன்னைக்கு நிகர் தாய் !
தாய்க்கு நிகர் அம்மா !
உலக ஒட்டுமொத்த ஆராய்ச்சி
மையம் இன்று வரை தோற்றுக் கொண்டே
இருக்கிறது உன்
அன்பிற்கு ஈடாய்
என்ன இருக்குமென்று ...
உயிரை தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம் தந்த
தெய்வம் நீயம்மா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rip ?❤️