10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரஸ்வதி பொன்னம்பலம்
வயது 83
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, லண்டன் Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி பொன்னம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் பத்தாகியும்
எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
பாலச்சந்திரன்(மகன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute