1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரவதனா சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
காலங்கள் கடந்து சென்றாலும் கடலுடன்
என்றுமே வாழும் அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
சண்முகராஜா குடும்பத்தினர்