உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தநாயகி நன்னித்தம்பி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-08-2023
மகளே!!!!!!! உனையிழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது உனை நினைக்காத நொடியில்லை இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும் மௌனிகளாக வாழ்கிறோம் உன்னை நாங்கள் ஒரு முறை தான் பிணமாக பார்த்தோம் ஆனால் நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக வாழ்கிறோம் மகளே மீண்டும் நீயிங்கு வரமாட்டாயா???
நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா??? இன்று வரை நாம் எட்டு வருடங்கள் நகர்ந்தும் உன்னோடு வாழ்ந்த நினைவில் ஒரு துளியும் மறக்கவில்லை செல்லக் கிளியே!
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும் அன்பு மகளே!!!!
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம் இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்...