10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகரத்தினம் நாகலிங்கம்
(சண்)
வயது 70

அமரர் சண்முகரத்தினம் நாகலிங்கம்
1943 -
2014
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகரத்தினம் நாகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று நேற்றுப்போல்
இருக்கிறது- உங்கள் பிரிவு
தசாப்தம் ஒன்றை எட்டுகின்றது
தாங்கமுடியவில்லை உங்கள்
இழப்பின் தவிப்பு...
தந்தையிழந்து நாம்
தாத்தாவை தெரிந்தும் தெரியாத
நம் குழந்தைகள்
இப்பிறவியில் எப்போ இனி...?
உங்களின் செயல்களை
நினைவுப்படுத்தும்
எங்களின் குழந்தைகள்
நிதமும் எங்களோடு
வாழ்கிறீர்கள் நீங்கள்...
அன்போடு அரவணைப்பை
அள்ளி எமக்களித்து விட்டு
அமைதியாய் உறங்கி
தசாப்தம் ஒன்றாகிறது
எங்கிருந்தாலும் உங்களின் ஆசி
எங்களுக்கு கிடைக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்