அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். மின்சாரநிலைய வீதியை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் மகாலஷ்மி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து பத்து ஆண்டுகள் ஆனதம்மா உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள் ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து வாழ்ந்த காலங்களை நினைக்கையில் எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
பத்தாண்டுகள் ஆனால் என்ன ஓராயிரம் வருடங்கள் ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால் நாம் துடிக்கின்றோம் அம்மா..
திருப்ப முடியாத காலத்தை உங்கள் நினைவுகளுடனும் நிழல்ப்படத்தினூடாகவும் திரும்பிப்பார்க்கின்றோம்.