உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சாந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்பத்தின் முத்தே அப்பா எம் இதயத்து திருவிளக்கே முத்து சறுக்கியதோ மகுடமுடி சாய்ந்ததுவோ எம் இதயம் உங்கள் நினைப்பில் எண்ணெய் இல்லா திரி ஆச்சே ஆண்டு ஒன்று ஆனாலும் ஆறாது எம் இதயம்
பாசம் காட்டிட இதயத்தின் பக்கத்தில் அமர்ந்த அப்பாவே நெஞ்சில் நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் கடவுள் அப்பாதான் கண்ணில் கண்ணீர் வந்தாலும் உங்கள் முகம் மறையவில்லை
என் வாழ்வின் இனியவரே என் இதய உறவே உங்களின் பிரிவு என்பது யாராலும் திருடமுடியாத பொக்கிஷம்
ஆண்டுகள் எத்தனை போனாலும் பாசப்பிணைப்பினால் நாம் பலரும் தவிக்கின்றோம் இல்லத்தின் சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!