Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 JAN 1935
மறைவு 08 JUN 2025
திருமதி சண்முகம் நாகம்மா
வயது 90
திருமதி சண்முகம் நாகம்மா 1935 - 2025 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இருபாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நாகம்மா அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தனுகோடி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாதன், தியாகராசா, விமலாதேவி, இந்திராதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரன்(SK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முத்துப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, கனகம்மா, தங்கம்மா, தையல்முத்து, சிவகாமிப்பிள்ளை, தம்பிராசா, லீலாவதி ஆகியோரின் சகோதரியும்,

சின்னம்மா, நாகம்மா, காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர், இளையதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாசமலர், நிர்மலாராணி, புவனேஸ்வரகுமார், குகதாசன், காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தகிர்சன், லிதர்சன், பிரணவி, நிதர்சன், தர்சன், லக்சன்யா, அபிராம், அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிசான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை நொச்சிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
செந்தவளவு இருபாலை கிழக்கு,
இருபாலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - மகன்
தியாகு - மகன்
விமலாதேவி - மகள்
இந்திராதேவி - மகள்

Photos

No Photos

Notices