Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 02 JUN 1943
ஆண்டவன் அடியில் 21 OCT 2021
அமரர் சங்கரப்பிள்ளை கனகசிங்கம் (அப்பூசி, அங்கிள்)
வயது 78
அமரர் சங்கரப்பிள்ளை கனகசிங்கம் 1943 - 2021 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொல்லன்கலட்டி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோயிலடி, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கனகசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆழாத்துயரில் எமையாக்கி
ஆழ்துயில் நீங்கள் கொண்டு
முப்பத்தொரு நாட்கள் ஆகினாலும்,
முப்பொழுதும் இன்றும்
எங்கள் நினைவில் நீங்கள்

கடைவாய் புன்சிரிப்பு
சளைக்காத பேச்சு
அனைவரையும் கவரும் தன்மை
தணியாத தன்னபிக்கை
சிங்கத்தின் சிலிர்ப்பு
இவையெல்லாம் நாமினி
எங்கு காண்போமோ?

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 11:30 மணியளவில் Steinackhaus, Herren weg 14, 4147 Aesch, வில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எம்முடன் இணைந்து பிரார்த்திக்க அன்புடன் அழைக்கின்றோம்.

எங்கள் குடும்பத்தலைவர் உயிர்நீத்த செய்தியறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூகவலைத்தள ஊடகங்களூடாகவும், மின்னஞ்சல் மற்றும் RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமது துயரில் பங்கெடுத்து, எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.