Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1924
இறப்பு 18 SEP 2020
அமரர் சங்கரப்பிள்ளை இராசையா
இளைப்பாறிய அதிபர்
வயது 96
அமரர் சங்கரப்பிள்ளை இராசையா 1924 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசையா  அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, தேவகி(லண்டன்), இளங்குமரன்(சிட்னி), இளங்கோவன், காலஞ்சென்ற ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

சந்திரகாந்தன்(லண்டன்), ஜெயச்சந்திரிகா(சிட்னி), கலிரதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இராசரத்தினம், பாக்கியம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனா, ரஜீன், கேஷன், ஆதவன், ஹரிணி ஆகியோரின்  அன்புப் பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதன், புவனேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான இராசமணி, நமசிவாயம், பாலசுப்பிரமணியம், சற்குணநாதன், யோகராணி(பாப்பா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இல. 8/1 விதானை வீதி, சுண்டிக்குளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 17 Oct, 2020