உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகாயராணி ஜெயநாயகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே.... இப்பூமியில் - நீங்கள் இல்லை என்பதை எண்ணும்போது.... இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை இனி நாங்கள் என்று காண்போம்? அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்? காலத்தால் எம்மைப் பிரிந்து கண்களில் நீர் மல்க வைத்து நாம் இங்கே தவித்து நிற்க எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!