
யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி தம்பாபிள்ளை அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.
நூறாவது வயதில் உங்கள் நினைவலைகளுடன்...
அப்பா... !
பாரினில் சீருடன் பண்புடை மக்களாய் வாழ்ந்திட
அன்புடன் பரிவுடன் அரவணைத்தெமை ஆளாக்கிய
எங்கள் அன்புத்தெய்வமே அப்பா....
இறைவன் உங்களை இறப்பால் பிரித்தாலும்
இதயத்தில் பதிந்த உங்கள் திருவுருவம் மறைந்திடுமோ??
அன்பினை ஊட்டி அறிவினைக்கூட்டி
அகத்தினில் தூய்மை பண்புறக்காட்டி
இன்பமாய் இவ்வுலகில் நாம் வாழ்ந்திட
இரு கண்களாய் இருந்த அப்பா! அம்மா!
மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள்
மனதுள் என்றும் ஒளிரும் தெய்வங்களே!
விண்ணில் இருந்தாலும் எங்கள் விடியல் நீங்களன்றோ!!
எம் சந்ததியின் தீபங்களே! எப்பொழுதும் உங்கள் நினைவுகளோடு நாம்....
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள்:
சித்ரா முத்துலிங்கம் (லண்டன்),
ரத்னா நிமலன் குடும்பம்(லண்டன்),
முருகதாஸ் மேகலா குடும்பம்(ஜோ்மனி),
சந்திரதாஸ் தக்ஸி குடும்பம்(அவுஸ்திரேலியா),
சுபத்திரா பாலசந்திரன் குடும்பம்(ஜோ்மனி),
இந்திரா கமலநாதன் குடும்பம்(அவுஸ்திரேலியா) மற்றும்
உற்றார், உறவினர்கள்.