10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் றேவதி ஸ்ரீகுமார்
(ரேணு)
வயது 30
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வடமராட்சி அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heilbron ஐ வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த றேவதி ஸ்ரீகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
உங்களை இழந்ததால் எங்கள்
வாழ்க்கையே திசை மாறிவிட்டதம்மா
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது.
உன் வித்தகத்தில் ஊரையும் உறவையும்
வியக்க வைத்து விட்டு உன்னுயிர்
ஆனவர்களை விட்டு சென்றதேனோ?
ஒரு பிறையோடும் விடி வெள்ளியாய்
வழிகாட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உங்களுக்கு
கண்ணீர் மலர்தூவி அஞ்சலிக்கின்றோம்.
தகவல்:
ஸ்ரீகுமார், ஷஸ்ரியான், ஸ்ரீஷான்