யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரவிச்சந்திரன் இராசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
சிரித்த முகம் தெரிகிறது அண்ணா சீறித்தெரியாத
மனம் எம் உயிரை வாட்டுது அண்ணா...
அரித்த ஏட்டைப்போல் எம் மனம்
நொந்து நொந்து போகிறது,
காலமெல்லாம் எங்களுடன் காவலாய்
இருப்பீங்கள் என்றிருந்தோம்.
காலை வாரிவிட்டு கண்ணீரைத்தந்து விட்டு
விண்ணுலகம் சென்றீங்களோ
ஆறாத்துயரத்தில் எங்களை ஆழ்த்தி விட்டீர்கள் அண்ணா
தேற்றுவார் இல்லை அண்ணா....
அண்ணியும் உங்கள் அன்புக் குழந்தைகளும் தேடுகிறார்கள்
நாள் முழுவதும் எப்ப வருவார் அப்பா......
என்று ஏங்குகிறார்கள்
உங்கள் பிரிவு தாங்க முடியாமல்கலங்குகின்றார்கள்.
உடன் பிறந்த நாங்களும் பேச்சிழந்து
மனம் உடைந்து புலம்புகின்றோம்...
நீங்கள் நோயுற்றேன் என்று நொந்து மனம் வாடாமல்
பாயில் படுக்காமல் ஒரு நொடியில் மறந்து பிறந்த
மண் வாசனை பாராமல் விண்ணுலம் சென்றீர்களே...
அண்ணா என்ற வார்த்தையே உங்களிலிருந்து தான் தொடங்கினோம் அண்ணா....
உங்கள் ஆத்மா இறைவன் திருவடியில் சாந்தி பெற வேண்டுகின்றோம்.
உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
மனைவி,பிள்ளைகள்,உடன்பிறப்புக்கள், மைத்துனர்மார் , மைத்துனிமார் , மருமக்கள், பெறாமக்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.