முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி பூரணலட்சுமி அம்மாள் அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீவரத்தினம்(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற திலீபன்(எட்வின்), இளங்கோ(பிரான்ஸ்), பார்த்திபன்(ஆசிரியர்), காலஞ்சென்ற பகிரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவானிதேவி(பிரான்ஸ்), சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மதுசன், அபிசன், அஸ்வதி, தயன்சிகாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், நாகேஸ்வரி மற்றும் வாசன்(பொன்னாச்சி பதிப்பகம்), பேபி சறோசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, குலசிங்கம், கிட்டிணசபாபதி, திருச்செல்வராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here