Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் கந்தசாமி
இறப்பு - 20 JAN 2018
அமரர் இரத்தினம் கந்தசாமி 2018 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு பன்னிபிடியவைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கந்தசாமி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஆறு போனாலும்
 அழியாது நம் சோகம்
மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
 மீளாத் துயில் கொண்டதேனோ!

எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி மகிழ
 வைத்தீரே யார் கண்பட்டு மறைந்து
 போனீரோ தாமரை மலர் நீரில்
ஆடுவதுப்போல நாங்கள்
உமைப்பிரிந்து தத்தளித்து மனம்
ஆடுகின்றதே எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ
தான்? அப்பா, உங்கள் அன்பு
 முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!

உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
 இறைவன் திருவடியில் சாந்திபெற
 பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: Mrs Kandasamy Gnanapoongothai (wife ), Mr Udayakumar,Sivagowry family (son ) , Sooriyakumar ,Viji family( Son ) , Udayarani Sivapalan family (daughter) , Selvarani Rajkumar family (daughter ) , And the Grandchildrens.

Summary

Photos

No Photos

Notices