யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி தங்கமலர் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவரின் ஆத்மா நித்திய இளைப்பாற்றி பெறுவதுடன்,முடிவில்லா ஒளி இவர் மேல் ஒளிர்வதாக. அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.