Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 1932
இறப்பு 26 MAY 2019
அமரர் இரத்தினம்மா நடராஜலிங்கம் 1932 - 2019 மடத்தடி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வாழ்விடமாகவும், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  இரத்தினம்மா  நடராஜலிங்கம் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் வாழ்விடத்தில் இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கார்த்திகேசு நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜலிங்கம்(ஓய்வுநிலை நெசவு ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜெகதீசன்(பிரான்ஸ்), ரோகிணி(ஆசிரியர்- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), ஜெயக்குமார்(அமெரிக்கா, கனடா), ஜெயபாலன்(மொன்றியல்- கனடா), ஜெயபரன்(கனடா), சித்திரா(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,  

காலஞ்சென்றவர்களான குமாரவேலு(ஓய்வுநிலை அதிபர்), முத்தையா(மார்க்கண்டு– ஓய்வுநிலை தபால் உத்தியோகத்தர்), ஞானாம்பிகை(ஓய்வுநிலை ஆசிரியர்), Dr.சிவகுரு, கனகலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, தில்லைநடேசன் மற்றும் கமலாவதி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நேசமலர் ஆகியோரின் நேசத்துக்குரிய மைத்துனியும்,  

சரோஜினிதேவி(பிரான்ஸ்), பரஞ்சோதி(இலங்கை), துஷ்யந்தி(கனடா), புனிதமலர்(மொன்றியல்- கனடா), அன்பரசி(கனடா), முருகதாசன்(கனடா), காலஞ்சென்ற குகநேசன், கணேசன்(அவுஸ்திரேலியா), சிவநேசன்(கனடா), பவானி(கனடா), ஜெயந்தி(கனடா), வல்லபை(இலங்கை), கஜேந்திரா(அவுஸ்திரேலியா), சரத்சந்திரா(இலங்கை), உத்தரை(பிரித்தானியா), காலஞ்சென்ற நமசிவாயசேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முருகதாஸ்(இலங்கை) அவர்களின் பெரியதாயாரும்,

பிரசாந்தி, கஜேந்திரன், பிரிந்தன், நிரோசன், தர்சிகா, நிராஜ், யதுசன், விதுசன், கார்த்திகன், மதுரிகன், தீபிகா, ஜெயனி, ஜெயசன், ஜெயராம், மிதுரன், மிதுரா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2019 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்