10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இரத்தினம் சிவலிங்கம்
1944 -
2014
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அக்குரசவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து தத்தளித்து
மனம் ஆடுகின்றதே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்