யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சிவபாலசேகரம்பிள்ளை அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொம்மந்தறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசீலன், கஜனி(ஆசிரியை- மு/தண்ணிமுறிப்பு அ. த. க பாடசாலை), வசந்தசீலன்(பிரான்ஸ்), மதுசா(லண்டன்), சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனா, கமலராஜன்(இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் முல்லைத்தீவு காப்புறுதி ஆலோசகர்), ரஜிதா, திலிபன்(லண்டன்), சிவதீஸ்(தீபன் படப்பிடிப்பாளர்- வித்தியாபுரம், ஒட்டுசுட்டான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விவேகானந்தன், காலஞ்செனற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அட்சிகன், அதிசன், புவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மறைவு செய்தி அறிந்து பெரும் துயர் கொண்டுள்ளேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்பதோடு,அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.