யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை கந்தையா அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினாறு பறந்து சென்றாலும்
பாச அணைப்பும் கனிவான பேச்சும்
இதமான புன்னகையும் இமைபொழுதும்
இதயத்தை விட்டு அகலவில்லை
அப்பா.. முகவரி தெரியவில்லை
மீண்டும் ஒரு பிறப்புண்டேல்
ஒன்றாக இணைந்திடுவோம்..
உலகத்தாரோடு கொரோனா பயத்தால்
கூண்டில் அடைபட்ட பறவைகள் போல
கட்டுண்டு எம் சிந்தனைகள் எல்லாம் சிதறிய போதும்
விதியின் முடிவில் கலந்து
இறைவன் நிழலில் அடி சேர்ந்த
எங்கள் அப்பா!!!
உங்கள் நினைவுகளோடு
நினைத்து உருகும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்....