Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 23 FEB 1931
மறைவு 20 JUL 2024
அமரர் இராசாத்தி தம்பிஐயா 1931 - 2024 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசாத்தி தம்பிஐயா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உலகியல் பயணத்தை நிறைவுசெய்து
இறையியல் பயணத்தை தொடர்ந்த
எம் இல்லத்தலைவியின் நினைவுச்சுவட்டில்…
திங்கள் ஒன்று கடந்தது..
எம் இல்லத்து ஒளிவிளக்காய்
வாழும் காலம் உங்கள்
இறை சிந்தனைகளும்,
அறிவுரைகளும்
வழி காட்டியது போல
எம் எண்ணமெல்லாம்
நீவிர் நிறைந்து
எம்மை நாம் செதுக்கிச் சீராக்க
சூட்சுமமாய் எமக்கு வழி காட்டும் உங்கள் கரங்கள் பற்றி…
எம் வாழ்நாட்களை நகர்த்த விழைகிறோம்...
தங்கள் ஆன்மா இறைதிருவடியில் இளைப்பாற...
பிரார்த்திக்கிறோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.