Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1938
இறப்பு 24 JUN 2024
திருமதி இராசம்மா சிவசுப்பிரமணியம்
வயது 85
திருமதி இராசம்மா சிவசுப்பிரமணியம் 1938 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு தொடரூந்து நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசம்மா சிவசுப்பிரமணியம்(நில அளவைத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா(சுவிஸ்), கிரிஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர், யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரி), புவிதா (சுவிஸ்), மாலதி (கோண்டாவில்), காலஞ்சென்ற ரோகிணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயரத்தினம்(சுவிஸ்), தயாபரன்(பிரபல வர்த்தகர், கோண்டாவில்), பிரபாகரன்(சுவிஸ்), மகாதேவா(கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நடராசா, நாகலிங்கம் மற்றும் செங்கமலம், சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வித்தகன்(சுவிஸ்), வியாபவன்(சுவிஸ்), மதீபன்(ஆசிரியர்), பிரசாத், லக்ஸ்மன், கீர்த்திகன், சுவேதிகா(கனடா), மதுர்சன்(சுவிஸ்), மாதவன்(சுவிஸ்), பிரியந்தன், கீதப்பிரியன், யாழினி, சரண்யா, கல்யாணி, அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உதித்தனன், அராத்யா, பிரிணிதா, பிறிமிகா ஆதிரன், மித்திரன், ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டுமுகவரி:
தொடரூந்து நிலைய வீதி,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மருமகன்
மகாதேவா - மருமகன்