Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 13 JAN 1946
மறைவு 21 MAY 2021
அமரர் இராசம்மா மார்க்கண்டு (இராசாத்தி)
வயது 75
அமரர் இராசம்மா மார்க்கண்டு 1946 - 2021 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா மார்க்கண்டு அவர்களின் நன்றி நவிலல்.

நிலம் இழந்து வந்து புலமதில் பொய்கையாய் மலர்ந்து
உறவுகளுடன் வைகையையாய் தவழ்ந்து
ஊருக்கும் உறவுக்கும் பிள்ளைகளுக்கும் பெயராகவும்
வேராகவும் தாங்கி நின்ற பேரொளி மறைந்தது

எத்தனையோ துன்பங்கள் துயரங்கள்
வலிகள் வேதனைகளைக் கடந்து
சாதனைகளாக பிள்ளைகளை உருவாக்கி
சந்தோசமாக அனைவரையும் புகழாக்கிய
தெய்வத் தாய் இறையுடன் கலந்தது

 வாழும் காலம் எல்லாம் வசந்தத்தை வீசிய
எங்கள் வழிகாட்டி விண்ணகம் சென்ற வேளையில்
தாங்கமுடியா வலியுடனும் தவிர்க்க முடியா
துயருடனும் பரிதவிக்கின்ற நேரத்தில்

 ஓடோடி வந்து - தொட்டணைத்து ஆறுதல் மடி தந்து
தொடர் கொரோனா யுத்தத்தையும் தாண்டி படியேறி
துணைக்கும் மனைக்கும் மக்கட் செல்வங்களுக்கும் கரம் தந்த உறவுகளை
இந்நேரம் நன்றியுடன் இறுகப் பற்றுகிறோம்

 எந்நேரமும் எமக்காக தன் குடும்ப வலி போல்
உணர்ந்து எம்மோடு கூடவே இருந்து
இறுதிக்கிரியை வரை எம்மை சுமந்த சொந்தங்களை
கண்ணீரோடு கை கூப்புகின்றோம்

அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு ஊரிலும், சுவிசிலும், கனடாவிலும், இல்லத்திற்கு நேரிலும் வந்து ஆறுதல் கரம் தந்தவர்களுக்கும் நேரில் வரமுடியா சூழலில் தொலைபேசியூடாகவும், சமூக ஊடகங்களுடாகவும் ஆறுதலும், தேறுதலும் கூறியவர்களுக்கும், மலர்கள், கண்ணீர் அஞ்சலிகள் வழங்கியவர்களுக்கும், உணவுகள், சிற்றுண்டிகள் வழங்கியவர்களுக்கும், இறுதியாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவருக்கும், இன்றைய ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், இம் மலரைக் குறுகிய காலத்தில் சிறப்பாக அச்சமைத்துத் தந்த பாரதி அச்சகத்தினர்க்கும், நினைவு மலரை ஆக்கிய எம்மவனாம். கவிஞன் சுபபாலாவுக்கும், ஊரவர்கள், உறவுகள், நட்புக்கள், மற்றும் அனைவரையும் நன்றியுடன் உங்கள் இரு கரங்களையும் இறுகப் பற்றுகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 35 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.