மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
அமைதியின் உருவகமாகவும், அடக்கத்தின் இருப்பிடமாகவும்,
பண்பின் பெருந்தகையாகவும், பாசத்தின் உறைவிடமாகவும்
எம் மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.