Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா அன்னம்மா
இறப்பு - 16 AUG 2013
அமரர் இராசையா அன்னம்மா 2013 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சங்கானை அராலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா அன்னம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!

கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு அம்மா!

எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நாம் தவிக்கின்றேன்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute