Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1934
இறப்பு 29 NOV 2019
அமரர் இராசதுரை ஆனந்தசிவம்
முன்னாள் வர்த்தகர்- பொரளை கொழும்பு
வயது 85
அமரர் இராசதுரை ஆனந்தசிவம் 1934 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை ஆனந்தசிவம் அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை ஆச்சிகண்ணு தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவயோகம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஞானசம்பந்தன்(Sam- நோர்வே), அரவிந்தன்(பிரித்தானியா), தட்ஷிகா(பிரித்தானியா), துஷ்யந்தன்(கனடா), இளந்திரையன்(கனடா), புங்கவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயலட்சுமி, சங்கீதா, தயாளன், மதிவதனி, நிருசுதா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷைனிகா, சிரோமிகா, கவிஷன், பிரவீன், ஹர்ஷன், ஆரதன், சன்யுகா, அனிக்கா, அக்‌ஷணன், அவனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சரோஜினிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான இராஜயோகேஸ்வரி, ஸ்ரீபதி, விவேகானந்தன், விக்னராஜா, இராஜாஜி மற்றும் மங்களேஸ்வரி(இலங்கை), இராஜராஜேஸ்வரி(டென்மார்க்), சுகிர்தா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், சாரதாம்பாள்(தவமணி) மற்றும் அம்பிகாவதி(கனடா), கணேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, தியாகராஜா மற்றும் மகாலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்