யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இறப்பியல் தேவசகாயம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
நித்திய பிதாவே
உமது சித்தத்தின் படி உம்மிடம்
அழைத்துக்கொண்ட
தேவசகாயம்பிள்ளை அவர்கள்
இவ்வுலக வாழ்வில் அறிந்தும் அறியாமலும்
செய்த பாவங்களை உமது திருத்தோளின்
கடுர காயத்தின் மூலம் மன்னித்து
நித்திய பேரின்ப சந்நிதியில் உம்மோடு
சேர்ந்தருள வேண்டும் மென்று உம்மை
இரந்து மன்றாடுகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை தமிழரசுக்கட்சி சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வேறு இடங்களில் இருந்து வந்து அன்னாரின் இறுதி கிரிகையில் பங்கு பற்றிய தமிழரசு கட்சியின் பிரமுகர்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள் அன்னாரின் இறுதி இரங்கற் திருப்பலியில் பங்கு பற்றி செபித்த அனைத்து அருட்தந்தையர்களுக்கும்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக 13-12-2021 திங்கட்கிழமை அன்று சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் மு.ப 06:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்படும் இரங்கல் திருப்பலியில் பங்கு கொண்டு செபிக்க அழைக்கின்றோம், அதனைத்தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.