10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரங்கசாமி முருகானந்தன்
வயது 55
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்.மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும், தற்போது ஜெர்மனி Bochum ஐ வதிவிடமாகவும் கொண்டிந்த இரங்கசாமி முருகானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
மீளவும் பெற முடியுமா நீ
எம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
ஒன்றென்ன பல தசாப்தங்கள்
கடந்து சென்றாலும் எம் நெஞ்சை
விட்டகலா உம் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோமே
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்