1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராமு சிந்தாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள்
விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!
பொழிந்த உங்கள் பாசத்தினை எண்ணி
விழியிலே வழிந்தோடும் நீரதைத் துடைக்க
வழிபார்த்து வாசலில் காத்துள்ளோம் – மீதிக்காலமதைக்
கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!
அன்னமது அளித்து ஆறுதலாய்ப் பேசிய
உன்னத அன்பின் ஊற்றினைப் பிரிந்து
கன்னத்தில் வடியுது கண்ணீர் வெள்ளமாய்!
தன்னந்தனியே எமைத் தவிக்கவிட்டு சென்றீர்களேயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
om shanthy shanthy shanthy.with loveiy memories fro sivakumaran, santha,ranjan, tharshini ,yasi, steevan steevan,piravin, yanos and hansikah.