யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
ஆற்றாது கண்ணீர் அழுது புலம்புகின்றோம்
31 நாட்கள் மறைந்தாலும் பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We deeply regret to hear about your loss. Please accept our most heartfelt condolences during this challenging time.