யாழ். அல்வாய் மேற்கு அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham, Tooting ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர் வரும் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 05:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்று மு.ப 10:00 மணியளவில் எமது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி: பழமுதிர்ச்சோலை, திக்கம், அல்வாய்.
Please accept our deepest condolences. Om Shanthi . RIP