யாழ். சாவகச்சேரி கண்டிவில் ஒழுங்கை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரம் விஸ்வலிங்கம் கந்தையா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா ,தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசதுரை , பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மார்க்கிறட் அவர்களின் அன்புக் கணவரும்,
ஒலிவியா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
வினோ அவர்களின் அன்பு மாமானாரும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம், தர்மேந்திரன், கமலா(பிரான்ஸ்),
லலிதா(ஜேர்மனி), நாகேந்திரன்(ஜேர்மனி), அருள்(இலங்கை), சுமி(சுவிஸ்)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியதாஸ்(கனடா), அன்ரன்(இலங்கை), காலஞ்சென்ற ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லியாஸ், ஆதித் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 23 Apr 2021 1:00 PM - 4:00 PM
- Tuesday, 27 Apr 2021 10:00 PM - 10:30 PM