Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 AUG 1944
மறைவு 14 FEB 2021
அமரர் இராஜலெட்சுமி இராஜரட்ணம்
வயது 76
அமரர் இராஜலெட்சுமி இராஜரட்ணம் 1944 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகம், லண்டன், சுவீடன்  Stockholm ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலெட்சுமி இராஜரட்ணம் அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சித்திரவேலாயுதம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வெங்கடாசலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரட்ணம்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நளினி , சிவச்செல்வன்(சுவீடன்),வதனி(லண்டன்), சுபாஜினி(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார்(இலங்கை), மீனா(சுவீடன்), சுதாகரன்(சுவீடன்), ஆதவன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமார்(திருகோணமலை), சுகுமாரன்(இந்தியா), சாந்தகுமாரன்(யாழ்ப்பாணம்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகெளரி, தனேஸ்வரி, நாகேஸ்வரி, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரிஷா, ரினோஸ், ரிதீஸ்(சுவீடன்) ஆகியோரின்  அன்பு அப்பம்மாவும்,

அஜய், அஜீஸ்(லண்டன்), சங்கீதா, ரவீன், கனிஷன்(சுவீடன்) ஆகியோரின்  பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2021 திங்கட்கிழமை அன்று சுவீடன் ஸ்டொக்கமில் Skogskyrkogården(Sockenvägen, Stockholm) நடைபெறும். கோவிட் 19 விதிமுறையினால் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடியோவில் பார்க்க விரும்புபவர்கள் +46700440786 whats app ல் தொடர்பு கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்