Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி இராஜலிங்கம் மகாலக்சுமி
இறப்பு - 21 AUG 2014
திருமதி இராஜலிங்கம் மகாலக்சுமி 2014 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் மகாலக்சுமி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

நாங்களும் இந்த மண்ணும்
உன்னை இழந்து
பத்து வருடங்களாகி விட்டது!

நீ எம்மை சுமந்த
அந்த பத்து மாதங்களை
எங்களால் இறக்கி
வைக்க முடியவில்லை!

பத்து மாதங்கள் மட்டுமா
நீ உயிர் சுமந்து
உலவிய காலம் மட்டும்
எம்மையும் சுமந்தாயோ தாயே!

நீ தீயில் எரிந்து கொண்டும்
எங்கள் மீது பூக்களை
அல்லவா சிந்தியவள் தாயே!
எங்கள் சின்ன சிரிப்பொன்றிற்காக
எத்தனை வேதனைகளை
உன் நெஞ்சுக்குள் மறைத்திருப்பாய்
அம்மா! அம்மா!

எங்கள் உடல் உயிர்
எத்தனை மகிழ்ச்சிகளுக்கும்
மொத்த சொத்தும்
தாயே நீயல்லவா?

எங்கள் உயிர் அணுக்கள்
ஒவ்வொன்றும்
உன் நினைவு தாங்கி
தவிக்கிறது தாயே!

இந்த பூமியின்
முதலும் முடிவும்
அம்மா என்ற
சொல்லில் தான்
உறைந்து கிடக்கிறது
அம்மா! அம்மா!

10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கிரியைகள் எதிர்வரும் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நீராவியடி இலங்கைவேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் மதியபோசன நிகழ்வும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதோடு மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
84, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்.

இங்ஙனம் மகன் - யாழ் நீராவியடி கண்ணன் மற்றும் அம்மையாரின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்: நீராவியடி கண்ணன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices