யாழ். பழையவேதக் கோவிலடி அல்வாய் வடக்கு அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஆனந்தபுரம் 5ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், கனடா Oshawa ஐ வதிவிடமாகவும் கொண்ட புதுமைராக்கினி ஞானசீலன் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை, வரரோணிக்கா தம்பதிகளின் மூத்த புதல்வியும், செபமாலை லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
றெபேட் மரியசில்வா, கில்பேட் யேசுராசா(தேன்), ஜெனிபேட் சூசைதாஸ்(வட்டன்), எட்வேட் அன்ரனிதாஸ்(மாவீரர் நதியரசன்), மேரி பிரான்சிஸ்கா(லைற்றா), குயின்மேரி(குட்டி), மேரி டுர்னலா(குவா) ஆகியோரின் தாயாரும்,
றோசா, சுகந்தி, லதா, றொபின், றொமேஸ், றேமன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திரிஷா, ஜீனுஷா, நிலவன், இனியன், அதிசயன், மிதுனா, வளன், விதுனன், மிதுனன், றொபேக்கா, றெனால்டோ, றொட்வின், குணா, றெனா, ஜெபா(ஞானகா), யூலியானா, றேமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பழையவேதக் கோவிலடி அல்வாய் வடக்கு அல்வாய் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு, பழையவேதக் கோவிலடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
நிகழ்வுகள்
- Tuesday, 30 Jun 2026 6:00 PM - 9:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167103007