
புத்தளம் சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புஷ்பாவதி ராஜகோபாலசாமி அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துவேல்பிள்ளை, பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜகோபாலசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பராஜ்(லண்டன்), காலஞ்சென்ற யோகராஜ், ஜோதிலக்ஷ்மி, அப்பலோராஜ், புனிதமலர், கிருபராஜ்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மலர்(லண்டன்), சாரதாதேவி, ஸ்ரீகாந்தா(கொழும்பு), காயத்ரிதேவி, குபேந்திரன்(குருநாகல்), விஜயதர்ஷினி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நித்யா, நிவேதா, நர்மதா, சரண்ராஜ், சரண்யா, கௌதம்ராஜ், அமல்ராஜ், அனுஷன்ராஜ், லதீஷ், யதுஷ்ராஜ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
திவ்யபாரதி, அனுஷவானதி, ருமேஷ், ஹர்ஷனி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சக்திகா, அக்ஷித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து(மல்வத்தை) எடுத்துச் செல்லப்பட்டு சிலாபம் பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.