Clicky

மரண அறிவித்தல்
திருமதி புஸ்பராணி சங்கரப்பிள்ளை
ஓய்வுநிலை சிரேஷ்ட ஆசிரியை. யா/உடுத்துறை மகாவித்தியாலயம்
இறப்பு - 05 NOV 2019
திருமதி புஸ்பராணி சங்கரப்பிள்ளை 2019 உடுத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சங்கரப்பிள்ளை அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(முன்னாள் அதிபர்- யா/உடுத்துறை மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

அல்பிரட் தம்பிராசா சட்டம்பியார் தம்பதிகளின் அன்பு பேத்தியும்,

ரொபேட் செல்வநாயகம் லில்லி மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும், வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையைச் சேர்ந்த பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புஸ்பகுமார்(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பாகரன்(அஞ்சல் திணைக்களம்), புஸ்பமாலா கண்ணகுமார்(முன்னாள் சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

அம்மன் கிளி(முன்னாள் கிராமிய வங்கி உத்தியோகத்தர்- கட்டைவேலி நெல்லியடி), கனகசிறி (நந்தா- ஆசிரியை நாகர் கோவில் ம.வி), கண்ணகுமார்(ஆசிரியர் ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியும், 

எழில், மகிழினி, மயூரிகா, மகீர்தன், சங்கரதாஸ், கர்ஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை இலங்கை திருச்சபையினரால் 06-11-2019 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் சம்பந்தர் கடைச் சந்தி, கரவெட்டி என்ற முகவரியில் உள்ள அன்னாரின் சிரேஷ்ட மகனின் இல்லத்தில் நடத்தப்படும் என்பதை எமது குடும்ப நண்பர்கள், எங்கள் உறவுகள் அனைவருக்கும் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices