Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1937
இறப்பு 24 DEC 2018
அமரர் புஷ்பநாதன் பத்மாவதி
வயது 80
அமரர் புஷ்பநாதன் பத்மாவதி 1937 - 2018 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பநாதன் பத்மாவதி அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற புஷ்பநாதன்(நிர்வாக உத்தியோகத்தர் வைத்தியப்பிரிவு) அவர்களின் அன்பு மனைவியும்,

யாழினி(ஆசிரியர் ஸ்ரீகணேசவித்தியாசாலை- சித்தன்கேணி), சதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஷ்ணானந்தன், காலஞ்சென்ற கமலாவதி, லீலாவதி(பாலர் பாடசாலை ஆசிரியை- மாதர் சங்கம்- சித்தங்கேணி), மாணிக்கவாசகர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரியும்,

றஞ்சன், சுபாஷினி(கௌரி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரபி, துவாரகன், மாதங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தட்சாயினி, நவரட்ணம், சாந்தி(ஜெர்மனி), சரஸ்வதி, இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, ஞானலட்சுமி, காலஞ்சென்றவர்களான தியாகராசா, பத்மநாதன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2018 புதன்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் இடம்பெற்று வழுக்கையாறு இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யாழினி - மகள்
சதானந்தன் - மகன்

Photos

No Photos

Notices