5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரதீபன் தர்சினி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே எங்களது தங்கையே!
என்றும் எங்கள் வாழ்வின் ஒளிவிழக்கே!
தாயுமாய் மகளுமாய் நினைத்திருந்தேன்
இடைநடுவே காலன் கொண்டு போனானே!
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்..
வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்
துடுப்பு இல்லாத படகு போல
சிறகு இல்லாத பறவை போல
திசையறியாது தவிக்கின்றோம்
துடிக்கின்றோம்
பாருலகம் கண்ணீரை
மழையெனவே சிந்திடுதே- நீ
வானுலகம் சென்றாலும் உன் நினைவதுவோ
எம் நெஞ்சில் என்றும் அகலாது ...!
ஆயிரம் உறவிருந்தாலும்
என் தங்கையின் உறவிற்கு ஈடில்லை..
தகவல்:
சசிகரன், புஷ்பாகரன், பிரபாகரன், வேணுகாந்த்(சகோதரர்கள்), அப்பா - சுகுமார், அம்மா - பத்மாவதி