யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் நடராஜா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 28.-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின்ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனநிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
துவாரகை வீதி,
உரும்பிராய் மேற்கு,
கோண்டாவில்.
சித்தியின் துயரச்செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்அவவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி ???