
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இலட்சுமிதேவி அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(இலங்கை போக்குவரத்துச்சபை முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி(கனடா), சுகந்தி(நோர்வே), சுடர்மதி(ஆசிரியை- இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), சுகந்தன்(ஆசிரியர்- மாயவனூர் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அங்குசமூர்த்தி(கனடா), இரவீந்தர்(நோர்வே), சண்முகநாதன்(வட்டக்கச்சி), தமிழ்ச்செல்வி(ஆசிரியை- இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரோஜன், ஜனனி, பவதாரனி, கோபிகா, விபிசா, சுபகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கம்சிகன், அபிர்சன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.