யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த பொன்னுசாமி , கண்மணி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கொக்குவில் மத்தியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம்(ஈஸ்வரி), யோகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
இந்திரஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந், காலஞ்சென்ற நிரோசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைச்செல்வி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹரிஷன், இஷான ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
இன்பமலர், காலஞ்சென்ற செல்வமலர் மற்றும் அரியமலர், முருகதாஸ், காலஞ்சென்றவர்களான திருஞானலிங்கம், பரமசிவம் மற்றும் மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Sorry to hear your loss Baba and Prashant, Accept my heartfelt condolences, may his soul rest in peace.