Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JAN 1945
இறப்பு 22 MAY 2020
அமரர் பொன்னையா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- கரவெட்டி
வயது 75
அமரர் பொன்னையா சோமசுந்தரம் 1945 - 2020 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சோமசுந்தரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சக்திதாசன், தமயந்தி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலயக் கல்வி அலுவலகம்- வடமராட்சி), சிவதாசன்(அதிபர்- கிளி/நாகேஸ்வரா வித்தியாலயம்), கண்ணதாசன், பராதிதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசேந்திரம், தவராஜேஸ்வரியம்மா, பாலசுப்பிரமணியம், பத்மநாதன், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நளாயினி, சிவானந்தஜோதி(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்), ரோகினி(ஆசிரியை ய/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாக்கியநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சஞ்சிகா, சஜந்திகா, விஷ்ணுகா, தனுராம், கஜீபன், நிதுஷா, நிலக்‌ஷா, விஷ்ணுவருணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2020 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: பொ. சிவகுமார்(சகோதரர்)

Photos

No Photos

Notices