Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1945
இறப்பு 23 DEC 2019
அமரர் பொன்னையா கதிரவேலு
வயது 74
அமரர் பொன்னையா கதிரவேலு 1945 - 2019 மீசாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கதிரவேலு அவர்கள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் அன்புத் துணைவரும்,

தீபா(இலங்கை), தீபாகரன்(டென்மார்க்), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மஞ்சூரன்(இலங்கை), நீரஜா(டென்மார்க்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நல்லம்மா, பூரணம், விசாலாச்சி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சின்னையா(இலங்கை), வீரசிங்கம்(இலங்கை), பரமேஸ்வரன்(டென்மார்க்), நேசதுரை(கனடா), பவானி(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான சின்னையா, சிவகுரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துபானிகா, லவனிகா, சிருஷ்டிகன், இஷானா, நிகேஷ், இலக்கியன், தஷ்வின், பிரவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புங்கடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்