Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் சிவமணி
சமாதான நீதவான்- Kotahena
இறப்பு - 26 MAR 2012
அமரர் பொன்னம்பலம் சிவமணி 2012 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ். மண்டைதீவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவமணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் உயிருக்கு உயிரான அப்பா!
ஆண்டுகள் பத்து உங்களை பிரிந்து,
நாங்கள் அனாதைகள் ஆகி ஆண்டுகள் பத்து
என்னை மறக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது?

என் பாசத் தந்தையே,
உங்கள் பிரிவால் நானும் அம்மாவும்
பரிதவித்து நிற்கிறோமே
நீங்கள் அறிய மாட்டீர்களா அப்பா?

ஏனப்பா எங்களை மறந்து போனீர்கள்?
சாப்பிட வருகிறேன் என்று கூறிப் போனீர்களே
திரும்பி வராமல் தொலைதூரம் போய்விட்டீர்களே அப்பா!
உங்கள் வரவுக்காக வழி மீது விழி வைத்துக் காத்திருந்தோமே

வந்தது உங்கள் உயிரற்ற உடல் மட்டுமே!
ஏனப்பா நிலையில்லா உலகத்தில்
எங்களை மட்டும் தவிக்க விட்டு ஓடி மறைந்தீர்கள்?
தாங்க முடியவில்லை உங்கள் பிரிவை!

நாங்கள் கண்கள் மூடித் தூங்கி
பத்து வருடங்கள் ஆகிவிட்டது!
நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கை நிலவு இல்லாத
வானம் போல் ஆகிப்போனதே அப்பா

நீங்கள் எங்கு இருந்தாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் அப்பா!
உங்கள் பிரிவால் வாடும்
அன்பு மகள் மற்றும் குடும்பத்தினர்....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices