15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் முத்துலிங்கம்
1937 -
2007
பெரியகல்லாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு 03 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் முத்துலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் பதினைந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute