10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் இரத்தினசிங்கம்
1934 -
2012
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்.மாதனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் இரத்தினசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா...!
உன்னைவிட்டு நானும்
என்னைவிட்டு நீயும்
பிரிந்துவிட்ட நேரமிது
உங்களையே நினைக்கின்றேன்
உனக்காக வாழ்கின்றேன்
கண்ணீரில் கரைகின்றேன்
கண்ணுறங்க மறக்கின்றேன்
என்னையேன் நீ மறந்தாய்
உன் நினைவை ஏன் துறந்தாய்
தூரத்து நிலவாக தொலைந்து
ஏன் போனாய்!
ஆண்டுகள் பத்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
தங்கவடிவேல் குடும்பத்தினர்